Tuesday, September 15, 2015

தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் - 6 - ப.நீலகண்டன்



பி.நீலகண்டன் 1916ல் பிறந்தவர்.மேடை நாடகங்களை எழுதி வந்த இவருக்கு ..இவரது நாடகமான நாம் இருவர் திரைப்படம் திரையுலகப் பிரவேசமாக்கியது.பின் வேதாள உலகம் படத்திற்கு 1948 ஆம் ஆண்டு வசனங்களை எழுதினார்.

1951ல் தான் இவரால் இயக்குநராக ஆக முடிந்தது.சி.என்.அண்ணாதுரை கதை வசனம் எழுத ஓரிரவு படம் இவரை இயக்குனராக்கியது.

பின் எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்களை இயக்கினார்.

அவற்றில் முக்கியமானவை நீதிக்கு தலை வணங்கு,நேற்று இன்று நாளை,ராமன் தேடிய சீதை,சங்கே முழங்கு,குமரி கோட்டம்,நீரும் நெருப்பும்,ஒரு தாய் மக்கள்,என் அண்ணன்,மாட்டுக்கார வேலன்,கணவன்,காவல்காரன் ,கொடுத்து வைத்தவள்,திருடாதே,சக்கரவர்த்தி திருமகள் ஆகியவை.

இதைத் தவிர்த்து கலைஞர் கதை வசனத்தில் வெளியான பூமாலை,பூம்புகார் ஆகிய படங்களின் இயக்குனர் இவர்.

சிவாஜியை வைத்து முதல் தேதி, கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்

No comments:

Post a Comment