1965ஆம் ஆண்டு பிறந்தவர் செல்வமணி
மணிவண்ணனிடம் உதவியாளராய் இருந்தவர்
புலன்விசாரணை திரைப்படத்தின் கதையை ஓவியங்களாக வரைந்து, அவற்றை ஒரு ஆல்பமாக்கி, அப்படத்தை இயக்கும் வாய்ப்பினையும் பெற்றார்.1990ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடு புலன்விசாரணை
அடுத்து, சில நாட்கள், மக்கள் அனைவராலும் பேசப்பட்டார்.அப்பட வெற்ரிக்கு முக்கியக் காரணம் அக்காலகட்டத்தில் குற்றவாளியாய் இருந்த ஆட்டோ ஷங்கர் பற்றியும், அரசியல் நிலைபாடுகளையும் அப்படம் உணர்ர்த்தியது சிறப்பு
அப்பட வெற்றி செல்வமணிக்கு விஜ்ய்காந்தின் 100 வது படமான கேப்டன் பிரபாகரன் படத்தை இயக்கும் வாய்ப்பினையுல் அளித்தது.இப்படம் வந்த ஆண்டு 1991
படம் வெளிவந்த அடுத்த மாதம் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட,அதைப் பின்னணியாகக் கொண்டு குற்றப்பத்திரிகை படத்தை ஆரம்பித்து, இயக்கினார்.இதனிடையே, பிரசாந்த், ரோஜா நடிக்க செம்பருத்தி படம் வெளியாகி வெற்றிதொடர்ந்து மூன்று வெற்றிகள்.
செல்வமணியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பு அதிகமாகியது
இந்நிலையில்.குற்றப்பத்திரிகை படம் சென்சாரால் தடை செய்யப்பட்ட்து.படம் வெளியாகவில்லை.
அதற்காக அலைய ஆரம்பித்தார் செல்வமணி.அதன் காரணமாகவோ என்னவோ..அதன் பின்னர் வந்த அவரது எந்தப் படங்களும் சொல்லும் படி அமையவில்லை.
16ஆண்டுகளுக்குப் பின்னர் 2007ல் குற்றப்பத்திரிகை வெளியாகி தோல்வியைத் தழுவியது
இவரது இயக்கத்தில் வந்த படங்கள்
1990 புலன்விசாரணை
1991 கேப்டன் பிரபாகரன்
1992 செம்பருத்தி
1994ல் அதிரடிப்படை
1994ல் கண்மணி
1995ல் ராஜமுத்திரை
1995ல் மக்களாட்சி
1997ல் அடிமைச்சங்கிலி
1997ல் அரசியல்
1999ல் ராஜஸ்தான்
2001ல் துர்கா
2007ல் குற்றப்பத்திரிகை
2015ல் புலன்விசாரணை 2
திரைப்பட நடிகை ரோஜா இவரது மனைவி ஆவார்
No comments:
Post a Comment