Saturday, September 24, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் சில நொறுக்ஸ் - 2


 

இயக்குநர் சிகரம் கே,பாலசந்தரின் நண்பரும், அவருடன் திரைப்பணியை இணைந்து புரிந்தவருமான அனந்து அவர்கள் இயக்கத்தில் வந்த படம் :சிகரம்:

குணசித்திர நடிகராய் இருந்த மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் வந்த படங்கள், கல்தூண்,அந்த ஒரு நிமிடம்,இன்று நீ நாளை நான்,முத்துகள் மூன்று,அம்மா இருக்கா

நகைச்சுவையில் கொடிகட்டி பறந்த நாகேஷ், தன் மகன் ஆனந்த பாபு நடிக்க இயக்கிய படம் :பார்த்த ஞாபகம் இல்லையோ

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் இயக்கிய படங்கள் உன்னைப்போல ஒருவன், யாருக்காக அழுதான்

பிரபல இலக்கியவாதி, நாடக ஆசிரியர் கோமல் சுவாமினாதன் இயக்கிய படங்கள் யுத்தகாண்டம்,அனல் காற்று,ஒரு இந்திய கனவு

வியட்னாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வந்த படங்கள், கௌரவம்,விஜயா,தேவிகருமாரியம்மன்,ஞானப்பறவை

நான், மூன்றெழுத்து ஆகிய படங்களுக்கு கதை, வசனகர்த்தாவான டி.என்.பாலு இயக்கத்தில் வந்த படங்கள் அஞ்சல்பெட்டி 520,மனசாட்சி,உயர்ந்தவர்கள்,மீண்டும் வாழ்வேன்,ஓடி விளையாடு தாத்தா,   சட்டம் என் கையில் (இப்படமே கமல் உதடுகளுக்கு முக்கியத்துவம் ஆரம்பித்த படம்) சங்கர்லால் (இப்படம் இயக்கிக் கொண்டிருக்கும் காலம் மறைந்தார்)

முரசொலி மாறன் இயக்கத்தில் வந்த படம் "மறக்க முடியுமா?"

நகைச்சுவை நடிகர், அரசியல் விமரிசகர்,பத்திரிகையாளர் சோ அவர்கள் இயக்கத்தில் வந்த படங்கள் முகமது பின் துக்ளக்,உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, மிஸ்டர் சம்பத், சம்போ சிவ சம்போ

அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாத்தான் ஆகிய  இரு படங்களை நடிகர் ராஜ்கிரண் இயக்கியுள்ளார்

ஸ்ரீதர்ராஜன் இயக்கத்தில் வந்த படங்கள்..1968ல் கீழ்மணியில் நடந்த நிகழ்வுகளை வைத்து இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவலை கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற பெயரில் இயக்கினார்.இப்படம் இந்திராகாந்தி தேசிய விருதைப் பெற்றது.தவிர்த்து இவர் இயக்கத்தில் இரவுப்பூக்கள்,பூக்கள் விடும் தூது ஆகிய படங்கள் வந்தன

நடிகர் மோகன் இயக்கிய படம் அன்புள்ள காதலுக்கு


நடிகர் ரமேஷ் அரவிந்த் கமல் நடித்த உத்தமவில்லன் படத்தை இயக்கினார்.னடிகர் சத்தியராஜ் இயக்கியப் படம் வில்லாதி வில்லன்
நாசர் இயக்கத்தில் வந்த படம் அவதாரம்
என் எஸ் கே , இயக்கியப் படம் பணம்,
சந்திரபாபு இயக்கிய படம் தட்டுங்கள் திறக்கப்படும்
நடிகர் ரவிசந்திரன் இயக்கியப் படம் மானசீக காதல்

நடிகர் ராமராஜன் இயக்கியப் படங்கள் அதிகம்.அவை, அம்மன் கோயில் வாசலிலே,மருதாணி, மனசுக்கேத்த பொண்ணு,பொன்னான நேரம், நம்ம ஊரு ராசா,ஹலோ யார் பேசறது, சீறி வரும் காளை,கோபுர தீபம்,மறக்க மாட்டேன்,விவசாயி மகன், சோலை புஷ்பங்கள்

ஜெயபாரதி
-----------------------

இவரைப்   பற்றி இன்று பல இளைஞர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.ஆனால், திரைப்பட இயக்குநர்கள் வரிசையில்....தமிழில் ஆர்ட் ஃபில்ம் எடுத்த இயக்குநர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் இவர்.சத்யஜித் ராய்,தபன் சின் ஹா, போன்றவர்களால் கவரப்பட்டு இயக்குனர் ஆனார்,

இவர் ஏழு திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.வணிக ரீதியாக அவை வெற்றி பெறாதிருக்கலாம்.ஆனால், பேசப்பட்ட படங்கள்.அவை தரமான படங்கள்

குடிசை, உச்சி வெயில்,நண்பா நண்பா,ரெண்டும் ரெண்டும் அஞ்சு,புத்ரன்,குருக்ஷேத்ரம்.விருது பெற்ற படங்கள்

வானத்தைப் பார்க்கிறார்கள்,24 சி,வேதபுரம் முதல் வீதி,தேநீர் ஆகிய படங்கள் முழுதும் எடுத்து முடிக்க வசதியில்லாததால் பாதியில் விடப்பட்டன.

புத்ரன் படம் முடிந்தும், பணப்பிரச்னைக் காரணமாக திரையரங்கைப் பார்க்கவில்லை

கலைப்படங்கள் வரிசையில் வந்த படங்கள்

ஜூபிடெர் சின்னதுரை இயக்கத்தில் அரும்புகள்
ஜான் அப்ரகம் இயக்கத்தில் அக்ரஹாரத்தில் கழுதை (தேசிய விருது)
நிமல் கோஷ் - குற்றவாளி
ச்ந்திரன் ஹேமாவின் காதலர்கள்
அருள்மொழி - காணி நிலம்
பாபு நந்தன் கோடு - தாகம்
கே எஸ் சேதுமாதவன்- மறுபக்கம் (நான் கு தேசிய விருது  , சிறந்த தமிழ்ப்படத்த்ற்கான தங்கத்தாமரை விருது  ), தவிர்த்து கமல் நடிக்க நம்மவர்கள்

(விட்டுப்போய் விட்டதாக பின்னூட்டம் இடுபவர்கள்..இத்ன் முதல் பகுதியையும் படித்துவிடவும்)

No comments:

Post a Comment