Friday, September 30, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 108 சேரன்



மதுரை- மேலூர் அருகே பழையூர்பட்டி என்ற ஊரில் 1970ல் பிறந்தவர் சேரன்

நான் கு முறை இவரது படங்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

கே எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநராய் இருந்து,பின் துணை இயக்குநராகவும் இருந்தார்.கமல் ஹாசனின் மகாநதி படத்திலும் துணை இயக்குநராக பணியாற்றினார்

பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குநர் ஆனார்

பின், பொற்காலம்,பாண்டவர் பூமி,வெற்றி கொடி கட்டு..மூன்று படங்களும் தொடர்ந்து  வெற்றி

இவரது ஆட்டோகிராஃப் படத்திற்கு நான் கு ஒளிப்பதிவாளர்கள் பணி புரிந்தனர்

ரவிவர்மா, செந்திலின் (சேரன்) இளமை காலத்தை 35 எம் எம் லென்ஸில்  எடுத்தார்

விஜய்மில்டன் , கேரள காட்சிகளை ஒளிப்பதிவு செய்தார்

துவாரகநாத் சென்னைக் காட்சிகளை பட்மாக்கினார்

சங்கி மகேந்திரன் மீதக் காட்சிகளை எடுத்தார்

இப்படம் மான்ற்றியல் உலகப் படவிழாவில் நான் கு முறை திரையிடப்பட்டது

இவரது இயக்கத்தில் வந்த படங்கள்-

1997ல் பாரதி கண்ணம்மா
             பொற்காலம்
1998ல் தேசிய கீதம்
2000ல் வெற்றி கொடி கட்டு
.2001ல் பாண்டவர் பூமி
2004ஆட்டோகிராஃப்
2005ல் த்வமாய் தவமிருந்து
2007ல் மாயக்கண்ணாடி
2009ல் பொக்கிஷம்
2015ல் ஜெ கே என்னும் நண்பனின் வாழ்க்கை

இதைத்தவிர்த்து வெளியார் படங்களிலும் நடித்துள்லார்.சொல்ல மறந்த கதை படம் மூலம் தங்கர்பச்சான் இவரை நடிகராக ஆக்கினார்

பின் பிரிவோம் சந்திப்போம்,ராமன் தேடிய சீதை,ஆடும் கூத்து,யுத்தம் செய்,முரண்,சென்னையில் ஒரு நாள்,மூன்று பேர் மூன்று கதை, கதை,திரைக்கதை,வசனம், இயக்கம்

வெற்றிகொடிகட்டு,ஆட்டோகிராஃப்,தவமாய் தவமிருந்து, ஆடும் கூத்து ஆகிய படங்கள் தேசிய விருது பெற்றன.(ஆடும் கூத்து படம் இன்னமும் வெளியாகவில்லை.ஆனாலும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் இப்படம் திரையிடப்பட்டதாம்)

சி 2 எச் (cinema to House)  DVD on the day of release33

ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை இப்படி வெளியானது.இதில் 150 வெளியிட்டார்களும், 3000 டீலர்ஸும் உள்ளனர் 

No comments:

Post a Comment