Friday, September 23, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 99 ஆர்.சுந்தரராஜன்




ஆர்.சுந்தரராஜன், ஒரு நடிகர்,திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் ஆவார்

இளையராஜாவுடன் இணைந்து காலத்தால் அழிக்கமுடியா பல இனிமையான பாடல்களுடன் பல படங்களை இயக்கியுள்ளார்.

ஜெயஷங்கர் நடிக்க 1977ல் அன்று சிந்திய ரத்தம் படம் மூலம் இயக்குநர் ஆனார்

தொடர்ந்து 1982ல் பயணங்கள் முடிவதில்லை என்ற மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கினார்.அதே ஆண்டு அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை என்ற படமும் வந்தது

நடிகர் மோகன் நடிக்க பல வெற்றிப்படங்கள் இவர் இயக்கமே!

1983ல் சரணாலயம், தூங்காத கண்ணின்று ஒன்று.

1984ல் நான் பாடும் பாடல்,விஜய்காந்த நடிப்பில் வைதேகி காத்திருந்தாள்

1985ல் குங்குமச்சிமிழ்,சுகமான ராகங்கள்

1986ல் விஜய்காந்த்  ராதா நடிப்பில் அம்மன் கோயில் கிழக்காலே ஆகிய படங்களும், அதே ஆண்டு, எம்.எஸ்.விஸ்வநாதன்,இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்த மெல்லத் திறந்தது கதவு. மற்றும் தழுவாத கைகள் ஆகிய படங்களை இயக்கினார்

1988ல் என் நிலவு பாடுது, கேள்வியும் நீயே பதிலும் நீயே

1989ல் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்க ராஜாதி ராஜா

1990ல் எங்கிட்ட மோதாதே, தாலாட்டுப்பாடவா

1991ல் ஒயிலாட்டம், சாமி போட்ட முடிச்சு

1992ல் திருமதி பழனிசாமி (சத்தியராஜ்)

1994ல் என் ஆசை மச்சான்

1995ல் காந்தி பிறந்த மண்,சீதனம்

1997ல் காலமெல்லாம் காத்திருப்பேன், கோபுர தீபம்

2006ல் உயிரெழுத்து

2013 சித்திரையில் நிலாச்சோறு

அகிய படங்களை இயக்கியுள்ளார்...

கவுண்டமணி, செந்தில் இருவரும் சேர்ந்து நகைச்சுவை விருந்து நமக்கு அநேக படங்களில் அளித்துள்ளனர்.அவர்களை முதன் முதலாய் இணைத்தவர் இவரே

தவிர, 90 படங்களுக்கு மேல் இவர் இதுவரை நடித்துள்ளது சிறப்பு.

No comments:

Post a Comment