Monday, September 12, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -90 மணிரத்னம்




கோபாலரத்னம் சுப்ரமணியம் என்ற மணிரத்னம் 1955ல் பிறந்தார்

திரைக்கதைவசனகர்த்தா,தயாரிப்பாளர் இயக்குநர்

1983ல் பல்லவி அனுபல்லவி என்ற கன்னடப் படம் மூலம் இயக்குனர் ஆனார்.
பின்னர் உணரு என்ற மலையாளைப்படம்

தமிழில் 1985ல்  பகல்நிலவு  (5-6-85)மூலம் இயக்குநராக அறிமுகமானார்

தொடர்ந்து அவர் இயக்கத்தில் வந்த படங்கள்-

1985ல் இதயக்கோயில்(14-9-85)
1986ல் மௌனராகம்
1987ல் நாயகன்
88ல் அக்னி நட்சத்திரம்
89 கிதாஞ்சலி (தெலுங்கு தமிழில் டப் செய்யப்பட்டது)
90 அஞ்சலி
91ல் தளபதி
92ல் ரோஜா
93ல் திருடா திருடா
95ல் பம்பாய்
97ல் இருவர்
98 தில் சே (ஹிந்தி) தமிழில் உயிரே என மொழிமாற்றம் செய்யப்பட்டது
2000ல் அலைபாயுதே
2002ல் கன்னத்தில் முத்தமிட்டால்
2004ல் ஆயுத எழுத்து (ஹிந்தியில் யுவா எனற பெயரில் தயாரானது0
2007ல் குரு (ஹிந்தி)தமிழில் அதெ பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது
2010ல் ராவணன் (ஹிந்தியில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது)
2013ல் கடல்
2015ல் ஓ காதல் கண்மணி

தவிர்த்து க்ஷத்திரியன் படக் கதையும், அதன் தயாரிப்பும் இவரே

இவரது மனைவி சுகாசினி ஆவார்.அவர் இயக்கத்தில் இந்திரா என்ற படம் வந்தது

இனி இவருக்குக் கிடைத்த தேசிய விருதுகளும்..இவர் படத்தைத் திரையிட்ட பட விழாக்களும்

1986 மௌனராகம் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது
1989 கீதாஞ்சலி (தெலுங்கு) சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தெசிய விருது
1990 அஞ்சலி சிறந்த தமிழ்ப்படத்திற்கான ட்ஹேசிய விருது
1992 தேசிய ஒருமைப்பாட்டுக்கான தெசிய விருது
         மாஸ்கோ திரைப்பிடவிழாவிற்கு பருந்துரைக்கப்பட்டது
1995 பம்பாய் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது
பொலிடிகல் ஃபில்ம் சொசைட்டியின் சிறப்பு விருது
ஜெருசலம்
எடின்பர் உலகப்பட விழாவில் திரையிடப்பட்டது
1997ல் இருவர் பெல்கிரேட் உலகப்படவிழாவில் திரையிடப்பட்டது
1998ல் தில்சே பெர்லின் விழாவில் NETPAL விருது
2000 அலைபாயுதே  பெர்லின் விழாவி  NETPAL  விருது
2002ல் கன்னத்தில் முத்தமிட்டால் சிறந்தத் தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது,ஜெருசலம் விழாவில் சிறந்தபடம்,விருது ,ITPA best director Award,,Audience Award...LOS ANGELES
. Audience Award - Riverrun international film Award,Best film-international film festival ZIMBABWE,,Audience/jury special award New haven film festival, Best International film westsister film festival

தவிர்த்து இவரது கதை, வசனம் ,தயாரிப்பில் சுகாசினி இயக்கிய இந்திரா படத்திற்கு பெல்கிரேட் உலகப் படவிழாவில் சிறந்த படத்திற்கான விருது

இவர் தயாரிப்பு கதை, வசனத்தில் க்ஷத்திரியன் படமும், அழகம்பெருமாளுக்காக டும் டும் டும் படக்கதை,வசனம் தயாரிப்பும் இவருடையது

பாலசந்தர் தயாரித்த இவரது ரோஜா படத்தில்தான் ஏ ஆர் ரஹ்மான் அறிமுகம்

Vedham Puthithu Kannan தனி பாணியை உருவாக்கினார் பல இன்றய சினிமா ஆவல் உள்ள இளைஞர்களுக்கு ஆதர்ச குரு
LikeReply523 hrs
Priyakarthick Great director.
LikeReply23 hrs
Bhoopal Singh ' ஆயுத எழுத்து ' படத்தில் பாரதிராஜா வில்லனாகவும் , ஹேமாமாலினியின் பெண் நாயகிகளில் ஒருவராகவும் நடித்தார்கள்.
நடிகர் சித்தார்த் இவரிடம் உதவி இயக்குனராக இருந்தார்.
LikeReply222 hrs
Bhoopal Singh படங்களில் வசனங்களை மிகவும் குறைவாக பயன்படுத்துவார். ' நீ அழகா இருக்கானே நினைக்கலே.........என்று ' அலைபாயுதே ' படத்தில் மாதவன் பேசியதுதான் இவர் படத்தில் நீண்ட டயலாக் என்று நக்கலடிப்பர் உண்டு. மாதவன் இப்படத்தில்தான் தமிழில் அறிமுகம் !
LikeReply222 hrs
Bhoopal Singh இவரது தயாரிப்பு நிறுவனங்கள் ' ஆலயம் ' மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் ! ' நாயகன் ' படத்துக்கு கமலுக்கு தேசிய விருது கிடைத்தது !
LikeReply122 hrs
Bhoopal Singh இவருக்கு ' தேச பக்தி வியாபாரி ' என்றும் ஒரு பட்டம் உண்டு. இருட்டிலே படம் பிடிப்பவர் என்றும் பெயர் ' ஸ்கிரினில டார்ச் அடிச்சுதான் இவர் படத்தைப் பார்க்கணும் 'னு சுஜாதா எழுதியிருந்தார். ' திருடா , திருடா , படம் இந்த கூற்றை பொய்யாக்கியது. இப்படத்திற்கு சுஜாதா வசனம் எழுதினார்.
LikeReply22 hrs
Bhoopal Singh நாகார்ஜுனா நடித்த ' கீதாஞ்சலி ' தமிழில் ' இதயத்தைத் திருடாதே ! ' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது , அதில் நாயகி பேசிய ' ஓடிப்போலாமா '' வசனம் பாப்புலரானது !
LikeReply222 hrs
Bhoopal Singh அரசியல் தலைவர்களை படங்களில் புகுத்துவதை தனது முதல் தமிழ் படத்திலேயே ஆரம்பித்து விட்டார் என்று சொல்லலாம். ' பகல் நிலவு ' படத்தில் சத்தியராஜின் தோற்றம் காமராஜர் போலிருக்கும். அது வில்லன் கேரக்டர் என்பதாலும் , இவரது முதல் படமாதலாலும் அதனை உரக்கச் சொல்லவில்லை !
LikeReply22 hrs
Bhoopal Singh தயாரிப்பாளர் ஜீ.வி.யின் தம்பி. ஜீ.வி.பிலிம்ஸ் என்கிற பொதுமக்கள் பங்கு நிறுவனத்தில் டைரக்டர். ஆனால் ஒருமுறை கூட ' ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றதில்லை ! பங்குதாரர்கல் இதனை ஒவ்வொரு ஆண்டும் கேட்டு , கேட்டு ஓய்ந்துவிட்டார்கள் !
LikeReply122 hrs
Bhoopal Singh ' இருவர் ' கருணாநிதி , எம்.ஜி.ஆர் நட்பைச் சொல்லும் படம் !
LikeReply22 hrs
Bhoopal Singh ' பம்பாய் '.....உண்மையிலேயே இவர் பம்பாய்க்கு போய் படமெடுத்தாரா என்ற நினைப்பை ஏற்படுத்திய படம். கிண்டியில் ஸ்பிக் கட்டதத்திற்கு எதிரி கேம்ப கோலா நிறுவனத்திற்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் காலியாக இருந்தது. அங்கே செட் போட்டே படத்தை முடித்தார்.
இருதரப்பினர் மோதிக் கொள்ளும் காட்சிகூட நாடகத்தில் வருவது போல் , இடதுபுறத்திலிருந்து பத்து பேரும் , வலதிலிருந்து ஒரு பத்து பேரும் வருவார்கள் , ஆயுதத்தை ஓங்குவார்கள் , அவ்வளவுதான் !
LikeReply222 hrs
Bhoopal Singh ' கடல் ' படத்தில் கார்த்திக் மகன் கௌதமை அறிமுகப்படுத்தினார். அரவிந்த்சாமியை மீண்டும் கொண்டுவந்தார் !
LikeReply122 hrs
Bhoopal Singh ' ஓ காதல் கண்மணி ' படத்தில் மம்முட்டி மகன் துல்ஹர் சல்மானை நடிக்க வைத்தார். இது இவருக்கு இரண்டாம் படம். முதல் படம் ' வாயை மூடிப் பேசவும் ! '
LikeReply322 hrs
Bhoopal Singh ' குரு ' ...அபிஷேக் பச்சன் ! திருபாய் அம்பானியின் வாழ்க்கை
LikeReply122 hrs
Bhoopal Singh 'தில் சே ' தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டதுபோல் கொஞ்சம் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்ட 'இரத்தத் திலகம் ! '
LikeReply22 hrs
Bhoopal Singh ' கன்னத்தில் முத்தமிட்டால் ' இலங்கை பிரச்சினை !
LikeReply122 hrs
Bhoopal Singh எல்லாவித பிரச்சினைகளையும் கையிலெடுப்பார் , ஆனால் எதற்கும் தீர்வு சொல்லமாட்டார்,
' பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதுதான் படைப்பாளியின் வேலை. அதற்கு தீர்வு காண வேண்டியவர்கள் அரசியல்வாதிகளும் , அதிகாரிகளும் , ஆட்சியாளர்களும்தான் ! ' என இவரது அபிமானிகள் கூறுகிறீர்கள் !
...See More
LikeReply521 hrs
Ram Doss இன்று வரை இவரை தாண்டி எவரும் வந்தது இல்லை. இவரது அமைதியான புன்னகை ஆயிரம் சொல்லும்.பல்லவி அனுபல்லவி கன்னடபடம் பார்த்துவிட்டு கோவைத்தம்பி அவர்களிடம் அண்ணே மணிரத்னம் அவர்களுக்கு மதர்லேண்ட் பிக்சர்ஸ்ல படம்பண்ணனும் சொன்னேன். அது இதயக்கோவில்.வானுயர்ந்த பாடல் முழுவதும் சூர்யஅஸ்தமனத்தில் மட்டும் படமாக்கப்பட்டது.இவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த புன்னகை, அன்புள்ளசிநேகிதி தொடர்களின் வசனகர்த்தா. நான்.
LikeReply921 hrs
Erode T Soundararajan ஒரு முறை என் வீட்டருகே. நடிகர் ஒருவரை. சந்திரமௌலி... சந்திரமௌலி. ..என அழைக்க அவர் பதில் சொல்லவில்லை. அப்புறம் அவர் இயற பெயர் சங்கரன் என நினைவு வந்தது. ப
LikeReply121 hrs
Kulashekar T Currently
Kaatru veliyidai
LikeReply21 hrs
Poovai Mani அக்னி நட்சத்திரம் இரண்டு பொண்டாட்டி காரரின் கதை.இதில் நடித்த விஜயகுமாரும்,ஜி.உமாபதியும் இரண்டு பொண்டாட்டிக்காரர்கள். அப்படத்தில் நடிக்கவேண்டி ஜி.உமாபதியிடம் முதலில் கேட்டபோது மறுத்துவிட்டார்.
மணிரத்னம் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்த , மே...See More
LikeReply319 hrs
Ezhichur Aravindan ஒன்று நிஜ மனிதர்கள் அல்லது புராணக் கதாப்பாத்திரங்கள் இவற்றை மையப்படுத்திய படங்கள் மணிரதனத்தின் பாணி. கர்ணன்-தளபதி சாவித்திரி சத்யவான்- ரோஜா ராவணன்-ராவணன். வரதராஜ முதலியார்-நாயகன்.எம்.ஜி.ஆர்.கலைஞர்-இருவர்.அம்பானி-குரு.
LikeReply10 hrs
Ezhichur Aravindan கடல்-பைபிள் கடவுள். சாத்தான் போராட்டம்
LikeReply10 hrs
Ezhichur Aravindan மதக்கலவரத்தை மையப்படுத்தி பம்பாய். இலங்கை கலவரத்தை கொண்டு கன்னத்தில் முத்தமிட்டால்.
LikeReply10 hrs
Ezhichur Aravindan நெஞ்சத்தைக் கிள்ளாதே இன்ஸ்பிரேஷனில் மெளனராகம்.
LikeReply10 hrs
Ezhichur Aravindan இவை எல்லாமே தன் முத்திரைக்குள் கொண்டு வந்த புத்திசாலி மணிரத்னம்
LikeReply10 hrs
Ezhichur Aravindan தளபதி படப்பிடிப்பு ஜெய்சங்கர் ரஜினியை பார்த்து உறசாகமாய் ஹாய் ஹாய் என வர ரஜினி அவரை வரவேற்று ஜெய் சார் இந்த மணி இருக்காரே ரொம்ப மோசமானவர் என சொல்ல ஜெய் பதறி என்னப்பா சொல்றே என கேட்க நடிக்க சொல்றாரு என ரஜினி சொல்ல ஜெய் வாய்விட்டு சிரித்து நடிச்சுட்டா போச்சு என்றார். மறுநாள் ரஜினியை அடையாளம் காட்டும் காட்சி 15 டேக் ஆன பின்பு ஓ.கே. ஆனது. ஜெய் வியர்த்து ரஜினியிடம் நீ சொன்னது உண்மைதான் என்றார்.
LikeReply210 hrs
T V Radhakrishnan அரவிந்தன், நீங்க வந்தாத்தான் பதிவே களை்கட்டுது
LikeReply210 hrs
Ezhichur Aravindan நன்றி சார்
LikeReply10 hrs
Ezhichur Aravindan ரஜினியை வைத்து ஒரு ரொமான்டிக் ஸ்கிரிப்ட் ரெடி செய்தார் மணிரத்னம். யாரடா நீ மன்மதா என்று டைட்டிலும் வைத்தாகி விட்டது. திருப்தியாக அமையாததால் படம் டிராப். பிறகுதான் தளபதி.
LikeReply10 hrs
Ezhichur Aravindan ஜுலை 19 2001 மாலை.அப்பல்லோ மருத்துவமனையில் சுஹாசினியும் அவர் மகன் நந்தாவும் அந்த அறைக்குள் நுழைகின்றனர். படுத்து கிடந்த சிங்கம் எழுந்து அமர்ந்தது. நநதாவை தலையில் கைவத்து ஆசிர்வதித்தது. ஏன்டா பேராண்டி தாத்தா நல்லா நடிப்பேன்டா உன் அப்பன் கிட்ட சொல்லி தாத...See More
UnlikeReply610 hrs
Poovai Mani சிவாஜி சார் பற்றிய பதிவு நெகிழ்ச்சியானது அரவிந்தன் சார்.
தூக்கத்தை மறக்கடித்து விட்டது சிவாஜி சாரின் நெகிழ்ச்சியான பேச்சு..
LikeReply29 hrs
Ezhichur Aravindan சாகும் வரை நடிப்பைப் பற்றியே அவரின் சிந்தனை இருந்தது சார். மகா கலைஞனின் காலத்தில் வாழ்ந்ததே என் பாக்கியம்.
UnlikeReply39 hrs
Poovai Mani உங்களோடு என்னையும் இணைத்துக் கொண்டால் பெருமை சார்...
UnlikeReply29 hrs
Ezhichur Aravindan நிச்சயம். சினிமா என்ற மூன்றெழுத்தில் சிவாஜியின் சுவாசம் இருந்துக் கொண்டே இருக்கிறது.
LikeReply9 hrs
Ezhichur Aravindan வீனஸ் பிக்சர்ஸ் பங்குதாரரான வீனஸ் கோவிந்தராஜன் மகன்தானே இவர்?
LikeReply9 hrs
Ezhichur Aravindan பின்னணியில் வெறும் கோரஸ் மட்டும் வைத்துக் கொண்டு. வாத்தியங்கள் இல்லாமல் ராசாத்தி என் உசுரு என்னுதுல்லை பாட்டு திருடாதிருடா வில் வரும். பாடிய சாகுல் ஹமீது சிலநாட்களில் ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். அவரின் மரணத்தை அவர் குரல் வழியாகவே அசரீரியாக்கியது விதி.
LikeReply19 hrs
T V Radhakrishnan வீனஸ் பிக்சர்ஸ் படங்களை வெளியிட்டவர் இவர் தந்தை கோபால் ரத்தினம்.வீனஸ் கோவிந்தராஜன் இவரது மாமா
LikeReply38 hrs
Ezhichur Aravindan நன்றி சந்தேகம் தீர்ந்தது.
UnlikeReply18 hrs
Kolathur Srirama Mukundan SO VENUS COLONY IN ALWARPET..........
LikeReply6 hrs
Vijaya Satyanarayan எல்லாமே ஹிட் box office movies இல்லையா ?
LikeReply2 hrs
Tamil Novel Readers வெற்றி இயக்குநர்
LikeReply32 mins
Jeeva Nanthan Sathyajothi Thyagarajan was the son of Venus Govindarajan. Maniratnam's first Tamil film was produced by Satyajothi.... ! Both from Venus groups!!
LikeReply4 mins

No comments:

Post a Comment