1929ல் கும்பகோணத்தில் பிறந்தவர் கே எஸ் ஜி., இவரும், இவரது சகோதரர் சபரிநாதனும் என்.எஸ்.கே., நாடகக்குழு, நவாப் ராஜமாணிக்கம் குழுக்களில் இருந்தனர்.
உடுமலை நாராயணகவி மூலமும், என்.எஸ் கே மூலமும் பாடலாசிரியராக திரையுலகில் பிரவேசித்தார் கே எஸ்ஜி.
அன்னையின் ஆணை,அமரதீபம் (துன்பம் சூழும் நேரம்) , எதிர்பாராதது (சிற்பி செதுக்காத),தெய்வப்பிறவி(கட்டடத்திற்கு மனைப் பொருத்தம் அவசியம்),அரசிளங்குமாரி ஆகிய படங்களுக்கு பாடல் எழுதினார்.
எல்லாம் உனக்காக, தெய்வப்பிறவி, குமுதம், படிக்காத மேதை ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதினார்.
பின் சிலகாலம் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்தார்
பின்னர், ஏ எல் ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் சாரதா படம் மூலம் திரைக்கதை, வசனம், இயக்கம் என தனது இயக்குநர் பணியைத் தொடர ஆரம்பித்தார்.பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.
சாரதா, கற்பகம் கை கொடுத்த தெய்வம் என தொடர்ந்து மூன்று படங்களும்
தமிழக அரசின் விருதைப் பெற்றன
70படங்களுக்கு மேல் இயக்கினார்
(சாதாரணமாக ஒரு இயக்குநரின் அனைத்துப் படங்களையும் குறிப்பிடாத நான், இவரது படங்கள் முழுதும் பதிவு செய்ய விழைகிறேன்)
சாரதா (62) தெய்வத்தின் தெய்வம் (62) கற்பகம் (63)கைகொடுத்த தெய்வம் (64)ஆயிரம் ரூபாய் (64)என்னதான் முடிவு (65)சின்னஞ்சிறு உலகம்(66) செல்வம் (66) சித்தி (66)(வை மு கோதை நாயகி கதை)கண் கண்ட தெய்வம் (67)பேசும் தெய்வம்(67) பணமா பாசமா(68)உயிரா மானமா(68)குலவிளக்கு (69)தபால்காரன் தங்கை (70)மாலதி (70) குலமா குணமா(71)ஆதி பராசக்தி (71)குறத்தி மகன் (72)வாழையடி வாழை (72)வந்தாளே மகராசி (73)நத்தையில் முத்து 973) சுவாதி ந ட்சத்திரம் (74) உறவுக்குக் கை கொடுப்போம் (75) (ஒய் ஜி மகேந்திரன் இயக்கம் மேற்பார்வை கே எஸ் ஜி)தசாவதாரம்(76)வாயில்லாப் பூச்சி(76)பட்டாபிஷேகம்(77)புண்ணியம் செய்தவள்(77)ரௌடி ராக்கம்மா(77)உள்ளத்தில் குழந்தையடி(78)காஞசி காமாட்சி(78)அடுக்கு மல்லி (79)நன்றிக்கரங்கள்(80) தேவியின் திருவிளையாடல் (82) நீர் நிலம் நெருப்பு(80) மகரந்தம் (81)நாயக்கரின் மகள்(82) யுகதர்மம்(83) பட்டிக்காடுப் பண்ணையார்(85) மகாசக்தி மாரியம்மன்(86) பார்த்தால் பசு (88) எனக்கு ஒரு நீதி(80) காவியத்தலைவன்(92)
சாரதா படத்திற்குசிறந்த தமிழ்ப் படத்திற்கான (3ஆவது )தேசிய விருது
கற்பகம் இரண்டாம் சிறந்தத் தமிழ்ப்படத்திற்கான விருது
கை கொடுத்த தெய்வம் சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது வெள்ளிப்பதக்கம்
இவரது பெரும்பாலான படங்கள் ஹிந்தியிலும், தெலுங்கிலும் எடுக்கப்பட்டன
பணமா பாசமா, தாஷ்கண்டில் திரையிடப்பட்டது. அவருக்கு யு எஸ் எஸ் ஆர் இப்படத்திற்கான 3 சான்றிதழ்களும் 3 வெங்கல பதக்கங்களும் வழங்கியது
கே ஆர் விஜயா, ஜெயசித்ரா,பிரமிளா, விஜயநிர்மலா ஆகியோர் இவரது அறிமுகம்
ஆயிரம் ரூபாய் படத்தில் குறத்தி வேடத்தில் தான் ந்டிகையர் திலகம்தான் என சாவித்திரி நிரூபித்திருப்பார்.
எ எல் ஸ்ரீனிவாசன் தலைமையில் இவருக்கு இவரது ரசிகர்கள் "இயக்குநர் திலகம்" பட்டமளித்துக் கௌரவித்தனர்
2015ல் அமரர் ஆனார்
Su
No comments:
Post a Comment